![](admin/uploads/.5eb4f761a388d9.29517058.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாளை மறுதினம் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடைபெற்றது. அதில் அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதும் அதனால் வலி ஏற்பட்டதும் உறுதிப்படுத்தபட்டது.
இதனையடுத்து அவருக்கு நாளை மறுதினம் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதன் பிறகும் அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் உள்ளது. சரத் பவாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் ‘‘சரத் பவாருக்கு பித்தப்பையில் பாதிப்புள்ளது. புதன் கிழமை அறுவை சிகிச்சை நடைபெறும்’’ எனக் கூறியுள்ளார். சரத் பவார் ஏற்கெனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.