![](admin/uploads/.5fc8cca4bdfaf9.50466986.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை : சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் அலங்காநல்லூர் பேரூர், தெப்பக்குளம் பகுதி, கேட்டு கடை, வலசை, சோழவந்தான் பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கேட்டுகடையில் இரண்டு வழி தரைப்பாலம் ரூபாய் 3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. மேலும் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு தந்தது இந்த அதிமுக அரசு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், உட்பட பலர் மீது போடப்பட்ட வழக்குகளை சட்டசபையில் பேசி முதல்வரிடம் கோரிக்கை வைத்து அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுவரை அலங்காநல்லூர் ஒன்றியத்தில் மட்டும் 3 அம்மா மினி கிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாய பின்னணியை கொண்ட இப்பகுதி கிராமங்களில் நீர் நிலையை மேம்படுத்த, விவசாயம் செழிக்க முல்லைப் பெரியாறு அணையில் இருந்து சாத்தியார் அணைக்கு ராட்ஷச பைப் மூலம் நீர் இணைப்பு திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் விரைவில் கொண்டுவரப்படும்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்தும் அடுத்த 5 ஆண்டுகளில் நிச்சயம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் பெண்கள் உரிமையை நிலநாட்டிட பெண்மையை போற்றும் ஒரே கட்சி அதிமுக அரசு மட்டுமே. எனவே வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனஅவர் பேசினார்.