Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான்- ஓ.பி.எஸ்

மார்ச் 30, 2021 01:49

தாராபுரம்:தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:பிரதமர் மோடியின் வருகை தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். இந்தியாவை இருளுக்குள் தள்ளிய கட்சி காங்கிரஸ்.காங்கிரஸ், திமுக கூட்டணி தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சாரும்.உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடி தான். என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்
 

தலைப்புச்செய்திகள்