Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதியில் இலவச  டிக்கெட் 15 ஆயிரமாக  குறைப்பு

மார்ச் 31, 2021 03:32

ஆந்திரா: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற் றின் காரணமாக திருப்பதியில் சுவாமி தரிசன இலவச டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பதற்கு இணங்க இக்கோயி லில் நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பின் அளவு அதிகரித்து வருகிறது. கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப் பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

இதன் காரணமாக திருப்பதியில் பாதிக்கும் குறைவான பக்தர்களே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர். இந்நிலையில், திருமலை யில் உள்ள அன்னமயப்பவனில் கூடுதல் தலைமை செயல் அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது அவர் கூறு கையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவில் நிர்வாகம் பல் வேறு கட்டுப்பாடுகளை நடை முறைப்படுத்தி உள்ளது. 

எனவே தினசரி வழங்கப்படும் சுவாமி தரிசன இலவச டிக்கெட் 25 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்படுகிறது என்றார். அதேநேரத் தில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்துவிட்டால் வரும் மே மற்றும் ஜூன் மாதத்தில் தான் அதுகுறித்து முடிவு சொல்ல இயலும் என்றும் கூறினார். 

மேலும், சுப்ரபாதம், அர்ச்சனை மற்றும் ஆர்ஜித சேவை தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என தெரி வித்தார். காய்ச்சல் மற்றும் சளி அறிகுறி உள்ள பக்தர்கள், திருப்பதி வருவதை தவிர்க்க வேண்டும் என்று தர்மா ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். மேலும் தரிசனம் முடிந்த பக்தர்கள், உடனடியாக ஊர் திரும்பவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்