Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி:அசாம் மாநிலத்தில் நேற்று 2-வது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளரின் காரில் ஓட்டு எந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த வார்டில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பா.ஜனதா கட்சியின் எண்ணங்கள் தவறானவையாக இருக்கின்றன. நாட்டின் ஜனநாயகத்தின் நிலை மோசமடைந்து இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.