Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின் இணைப்பை துண்டித்து அதிமுக பணப்பட்டுவாடா- காங்கிரஸ் புகார்

ஏப்ரல் 03, 2021 12:44

சென்னை:தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும்படையினர் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.அதையும் மீறி பணப்பட்டுவாடாவும் நடைபெறுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவில் மின் இணைப்பை துண்டித்து அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், மின் இணைப்பை துண்டிக்க மின் வாரிய ஊழியர்கள் உடந்தையாக செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்