![](admin/uploads/.5ecf6975ea7a17.75835963.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை:கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.இவருக்கு ஆதரவாக கடந்த 28-ந் தேதி நடிகர் ராதாரவி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசனின் தனிப்பட்ட நடத்தை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று கூறப்பட்டு இருந்தது.இதனை ஆராய்ந்து பார்த்த தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் நடிகர் ராதாரவி மீது தனிப்பட்ட நபரின் நடத்தை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.