Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆலந்தூர்: ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நேற்று முதல் அந்த நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணை நிறுவனம் நிறுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
இன்று காலை 1.13 மணிக்கு பாரீஸ் செல்லும் விமானம் மற்றும் காலை 11.25, மாலை 4.50 மணிக்கு மும்பை செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி நேற்று மாலையே பயணிகளுக்கு விமான நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் வேறு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.