![](admin/uploads/.603a2eb4edf919.89425248.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வன் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு பதிவு பரபரப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவான இயந்திரங்களை தேனி அருகே கொடுவிலார்பட்டியில் தனியார் கல்லூரியில் உள்ள அறையில் வைத்துள்ளனர்.
இந்த வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் வருவதற்கு முன்னதாக சீல் வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு வந்த தங்கத்தமிழ்செல்வன் இது பற்றி கேட்டு தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.