![](admin/uploads/.60c49fd9e59449.76100636.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:-
வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ள பகுதிக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு பட்டாளியன் போலீசும், வ.உ.சி பொறியியல் கல்லூரி வெளிப்புறப் பகுதியில் உள்ளூர் போலீசாரும் என 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். மேலும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். பேட்டியின்போது தூத்துக்குடி டிஎஸ்பி கணேசன், தென்பாக உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.