![](admin/uploads/.5eb8114b20cb60.04001523.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தமிழகம்: 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் திருச்சி சாலையில் உள்ள ஒரு போட்டோ ஸ்டுடியோவில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. குறிப்பிட்ட ஸ்டூடியோவில் பணம் பதுக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடத்த உள்ளனர்.
இதன் காரணமாக ஜிரோ கிராவிட்டி போட்டோகிராபி என்ற போட்டோ ஸ்டூடியோ உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.