Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தை இல்லாத ஏக்கத்தில் விவசாயி தற்கொலை

ஏப்ரல் 08, 2021 11:59

களக்காடு: களக்காடு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில்
மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை
செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர், வேலவன் குடியிருப்பை
சேர்ந்தவர் விவசாயி பொன்ராஜ் (வயது 30). இவரது மனைவி
நம்பிதாய் (20). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம்
நடந்தது. குழந்தை இல்லை.

 
இதனால் பொன்ராஜ் விரக்தி அடைந்தார். இந்நிலையில் கடந்த 6-ந்
தேதி காலை வயலுக்கு சென்ற பொன்ராஜ் வி‌ஷம் குடித்து
மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஏர்வாடி
தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்
சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை
பலன் அளிக்காமல் பொன்ராஜ் இறந்தார்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர்
அருள்பிரகாஷ், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்