Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓ.பன்னீர்செல்வம் மாமியார் மரணம் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஏப்ரல் 08, 2021 12:02

சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார்மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல்அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமானஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் அ.வள்ளியம்மாள் நேற்று இரவுஇயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும்வேதனைப்படுகிறேன்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கும், தாயாரை இழந்துவாடும் விஜயலட்சுமிபன்னீர்செல்வத்துக்கும், அவர்தம் குடும்பத்தினர், உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், கழக உடன்பிறப்புகள்சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.வள்ளியம்மாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறபிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்