Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

ஏப்ரல் 08, 2021 12:05

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே
கொரோனா தொற்று காரணமாக ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட
பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி
வருவதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தடுப்பு
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில்
நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அங்கு தற்போது 338 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு
சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,
திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அசோக் நகர் மற்றும் நாராயணன்
நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள்
தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து சீல் வைத்தனர். 

தலைப்புச்செய்திகள்