Monday, 8th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதுகாப்பு படையை பா.ஜனதா தனது தேவைக்காக தவறாக பயன்படுத்துகிறது

ஏப்ரல் 10, 2021 10:39

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “4 பேரை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்று உள்ளனர். இது கண்டனத்துக்குரியது. பாதுகாப்பு படையை பா.ஜனதா தனது தேவைக்காக தவறாக பயன்படுத்துகிறது” என்றார்.

தலைப்புச்செய்திகள்