Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்ணீர்- மோர் பந்தல்களை அமையுங்கள்: டி.டி.வி.தினகரன்

ஏப்ரல் 10, 2021 10:55

சென்னை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தண்ணீர்-நீர் மோர்ப் பந்தல்களை நிறுவிட வேண்டுவதாக டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் கொளுத்துகிறது.  இன்னும் போகப்போக வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. 

இந்த நேரத்தில் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்களையும், நீர் மோர்ப் பந்தல்களையும் திறந்திட வேண்டுகிறேன். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதியில் இருக்கிற கழக நிர்வாகிகளும், உடன் பிறப்புகளும் மேற்கொண்டிட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கண்மணிகளின் இந்தப் பணி, பாதசாரிகளுக்கும், இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். 

அதற்குத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப் பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் இத்தகைய தண்ணீர் மற்றும் மோர்ப் பந்தல்களில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிப்பதிலும் உரிய கவனம் செலுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்