Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் தினசரி பாதிப்பு 1.68 லட்சமாக உயர்வு

ஏப்ரல் 12, 2021 05:34

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1.68 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்