Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும்

ஏப்ரல் 13, 2021 05:44

சென்னை: தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்ப்பேட்டை, சென்னை கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-செங்கல்பட்டு/திருமால்பூர் பிரிவுகள் இடையே ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். 

அந்த வகையில் 449 மின்சார ரெயில் சேவைகளே அன்று இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்