Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா தந்தை மறைவு

ஏப்ரல் 14, 2021 05:48

சென்னை: திருவள்ளூர் கலெக்டர் பொன்னையாவின் தந்தை பால்ச்சாமி, 97, வயது முதிர்வால் நேற்று காலமானார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ச்சாமி. தி.மு.க.,வின் மூத்த நிர்வாகியாக திகழ்ந்தவர். அக்கட்சியில் ஒன்றிய செயலர், மாவட்ட கவுன்சிலர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா,தமிழக வேளாண் விற்பனை வாரிய முன்னாள் தலைவர் கே.பி.டி.கணேசன், சித்தனேந்தல் அ.தி.மு.க., பிரமுகர் ராஜேந்திரன்; அ.தி.மு.க., விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ஜெயபெருமாள் ஆகியோர், இவரது மகன்கள். பால்ச்சாமியின் இறுதிச்சடங்கு, சித்தனேந்தல் கிராமத்தில், இன்று பகல், 2:00 மணிக்கு நடக்கிறது.

பால்ச்சாமியின் மறைவுக்கு, தேவரின கூட்டமைப்பு மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்