Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜிண்டால் நிறுவனம் ஆக்சிஜன் தயாரித்து வழங்க முடிவு

ஏப்ரல் 18, 2021 09:06

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவன( ஜேஎஸ்பிஎல்) நிர்வாக இயக்குநர் வி.ஆர்.சர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு 50 முதல் 100 டன் திரவ ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும். மக்களின் உயிரைக் காக்கும் நோக்கில் குறுகிய காலத்துக்கு ஸ்டீல் உற்பத்தியை நிறுத்திவிட்டு ஆக்சிஜன் சப்ளை செய்யப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆலையிலிருந்து ஆக்சிஜன் தயாரித்து இலவசமாகஅளிக்கப் போவதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்