Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் ‘‘லேசான கொரோனா அறிகுறி இருந்ததால், பரிசோதனை செய்து கொண்டேன். அதில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள், தயது செய்து அனைத்து பாதுகாப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றவும். பாதுகாப்பாக இருங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பல அமைச்சர்களும், வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.