Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை ஐகோர்ட்டில் மேலும் 32 பேருக்கு கொரோனா

மே 01, 2021 05:57

மதுரை: நாடு முழுவதும் சுழன்றடிக்கும் கொரோனா 2-வது அலை நீதித்துறையையும் விட்டுவைக்கவில்லை. மதுரை ஐகோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இருந்தாலும் மதுரை ஐகோர்ட்டில் பணியாற்றுபவர்களை பரிசோதித்ததில் ஒரு நீதிபதி உள்பட 13 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு பணியாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் என மேலும் 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்