![](admin/uploads/.60f16b8b612c41.03221337.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றிக்காக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்வதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சி கட்டிலில் அமர உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு, ராஜ்நாத் சிங் தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘‘தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றிக்காக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.