![](admin/uploads/.5eba42a5a732c3.05202616.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூர் மாநகர தல அஜித் தலைமை நற்பணி மன்றம் சார்பாக அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி ரோடு தனியார் மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்ததானம் செய்தார்கள் மேலும் பெரியார் காலனியில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பத்து நபர்களுக்கு பொருள் மற்றும் பண உதவி வழங்கப்பட்டது.
முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளியில் மதிய உணவும் பாரப்பாளையம் பகுதியில் அன்னதானமும் காங்கயத்தில் 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்ததானம் சேவூர் ஒன்றிய தலைமை சார்பாக 40க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வாத்தியார் ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஆனந்த் துணைச் செயலாளர் பிரவீன், துணை அமைப்பாளர் முத்துராஜ், தலைமை அமைப்பாளர் பாண்டியன், துணைச் செயலாளர் கொங்கு சிவா மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கோவிந்தராஜ், அருண் தலைமை அமைப்பாளர் சசிந்திர பிரபு, செந்தில், குமரேஷ், கார்த்தி மற்றும் தவமணி, மீசை கார்த்தி, காளி பாலாஜி, அருண், தளபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.