![](admin/uploads/.61051a29ae7910.93826258.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மேற்கு தாம்பரம் வைகை நகர் முதல் தெருவில் மின்சாரம் இணைப்பு பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியில் வட மாநிலத்து ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். மின்சார பணிக்காக தோண்டப்பட்ட பல்லமானது 5 அடியாக உள்ளதாகவும் இந்த பள்ளத்தை 10 நாட்களுக்கும் மேல் ஆகியும் மூடாமல் அலட்சியம் செய்து வருவதாகவும்,பள்ளத்தை சுற்றி எந்த ஒரு தடுப்பு வேளியும் அமைக்க வில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் ஏற்கனவே மின்சார பணிக்காக தோண்டப்பட்ட 5 அடி பல்லமானது மூடப்படாமல் இருக்கும் போது, அதற்குப் பக்கத்திலேயே அதே போல் இன்னொரு பள்ளத்தை தோண்டி வருவதால், அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் அந்த குறுகிய சாலையில்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தோடு வாகனம் ஓட்டி வருவதாகவும் அவ்வாறு இடறி கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூடிய விரைவில் சாலையை சரி செய்து பள்ளத்தை மூடும் படியாகவும் தாம்பரம் மின்சார துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.