![](admin/uploads/.5deb5c1782d630.14890468.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் மருத்துவமனை அருகே மர்மமான முறையில் மான் ஒன்று இறந்து கிடந்தது. மக்கள் குடியிருக்கும் பகுதியில் மான் இறந்து கிடந்ததை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து உடணடகயாக பீர்க்கன்காரணை காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் அதிகமாக நாய்கள் சுற்றி திரிவதால் நாய்கள் கடித்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மான் உடலில் கால் கை என பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மானை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.