![](admin/uploads/.603b95c8a50ec4.53310281.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குரோம்பேட்டை: குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் நேதாஜி நகரில், நெமிச்சேரி ஏரிக்கரையை ஓட்டிய குடிசை வீட்டில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீடீர் தீவிபத்தால் அந்த வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியது, இதனால் அதே குடிசையில் பக்கத்து வீட்டிற்கும் தீ பரவியது, தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது மேலும் இரண்டு கேஸ் சிலிண்டர்கள் அடுத்து அடுத்து வெடித்தது,
இதில் தீயணைப்பு வீரர் ரவிகுமார் காலிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மேலும் அப்பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் வெங்கடேசன்(25,) பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் செல்வகுமார்(30) ஆட்டோ ஓட்டுனர் இவர்கள் இரண்டு பேருக்கும் கால் உடைந்து பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் தாம்பரம் தீயணைப்பு துறையை சேர்ந்த இரண்டு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கிது. மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் 500க்கு மேற்பட்டவர்கள் சாலையில் வந்து கூடியதால் பதட்டம் நிலவியது. இதனை அறிந்து அங்கு விரைந்து வந்த சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.