![](admin/uploads/.5cfb5151e98e89.07898636.gif)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து அனைத்து துறைகளின் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்டரங்கில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து துறை அலுவ லர்களுடான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயகாந்த்திகேயன் முன்னைலையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அருகில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சட்டமன்ற உறுப் பினர்கள் க.செல்வராஜ், எம்.ஆனந்தன், என்.விஜயகுமார், சி.மகேந்திரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குநர் ரூபன் சங் கர்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.