Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலைகளிலேயே குப்பையை எரிப்பதால் பொதுமக்களுக்கு கடும் அவதி

மே 13, 2021 05:22

தாம்பரம்: திருவாஞ்சேரியில் சாலைகளிலேயே குப்பையை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த திருவாஞ்சேரியில் உள்ள அகரம்தென் மெயில் ரோட்டில் நூற்றுகணக்கான குடியிருப்பு வீடுகள் கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. 

இந்த நிலையில் தினமும் ஆயிரகணக்கான வாகனங்களில் வந்து செல்லும் இந்த சாலையில் மர்ம நபர்கள் இரவோடு இரவாக தினமும் லாரியில் குப்பை கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். மேலும் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் பல மணிநேரம் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து சுவாச பிரச்சனைகளும் ஏற்படுகிறது. 

இதன்காரணமாக தற்போது கோரொனா காலத்தில் பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். எனவே திருவாஞ்சேரி ஊராட்சி சார்பில் உடனடியாக அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா பொருத்தி குப்பைகளை கொட்டி செல்லும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தலைப்புச்செய்திகள்