![](admin/uploads/.5f084d756b5a97.83280663.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று பதவியேற்ற முதல் நாளிலேயே கொரோனா நிவாரண தொகை நான்காயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்குவதற்காக டோக்கனை 200 நபர்களுக்கு கொங்கு நகர் 31வது வட்ட கழகத்தில் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் வழங்கினார்.
உடன் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராசன், பகுதி செயலாளர் சம்பத்குமார், வட்ட கழக செயலாளர் கோமகன் மற்றும் பல நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர். வந்திருந்த பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கபசுர குடிநீர், இனிப்புகள் வழங்கப்பட்டது