![](admin/uploads/.5e735a74a674f1.45686677.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை: கடந்த மே 14-ம் தேதி வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி அரசு மதுபான கடையில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஓம் பிரகாஷ் மீனா நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் குற்றவாளிகளை விரைவாக பிடிக்கும் பொருட்டு 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை குற்றவாளிகள் 8 பேர் தனி படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதாவது திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த ஹரிஹரன், குரு பாலன், தனராஜ், தமிழ்மாறன், புல்புல் (எ) பிரவீன், செல்லூரைச் சேர்ந்த ரதீஷ் குமார், கலையரசன், சதீஷ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.