![](admin/uploads/.5fc4b38767ecd3.95573396.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மயிலாடுதுறை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை தற்போது அதிகரித்து வருகிறது.
இதையொட்டி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வங்கியின் துணை பொது மேலாளர் ராமசாமி, மயிலாடுதுறை கிளை மேலாளர் மகாதேவன் ஆகியோர் தலைமை மருத்துவர் ராஜசேகர் முன்னிலையில் டிஆர்ஓ முருகதாஸிடம் வழங்கினர். அதனை டிஆர்ஓ முருகதாஸ் தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் ஒப்படைத்தார்.