Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன்னார்குடி உழவர் சந்தை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றம்

மே 19, 2021 04:33

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. 

மன்னார்குடி மட்டுமின்றி சுற்றியுள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கடந்த சில தினங்களாக உழவர் சந்தை வந்து செல்லும் மக்களின் கூட்டம் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அதிகரித்து காணப்பட்டது. 

இது குறித்த செய்திகளும்  ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து உழவர் சந்தையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதத்திலும் மன்னார்குடி உழவர் சந்தை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு வரிசையில் நின்று பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்லும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்