Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தையை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பலி

மே 20, 2021 06:10

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராசேந்திரன். விவசாயியான இவரது மகன் கதிர்வேல்(வயது 32). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கொரோனா முழு அடைப்பு காரணமாக இவர் சென்னையில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். தற்போது தனது வீட்டில் இருந்து நிறுவன பணிகளை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 வயதில் அன்புச்செல்வன் என்ற மகன் இருந்தான்.

இவரது வீட்டின் அருகில் உயர்அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கதிர்வேலின் குழந்தை அன்புச்செல்வன் வீட்டின்
அருகில் விளையாடிக்கொண்டு இருந்தான்.

அப்போது உயர் அழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக திடீரென அறுந்து அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை அன்புச்செல்வன் மீது விழுந்தது.

அதைப்பார்த்த கதிர்வேல் உடனடியாக ஓடிச்சென்று தனது குழந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது கதிர்வேல் மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம்
தாக்கியதில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை அன்புச்செல்வன் தீக்காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

தலைப்புச்செய்திகள்