Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. எனவே, தமிழகத்தில் உள்ள பிரபலமான வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில், கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது 3 தேவாலயங்களில் வெடிகுண்டு தாக்கதல்கள் நடந்தன. நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் மொத்தமாக இந்த தாக்குதல்களில் இதுவரை 290 பேர் இறந்தனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரார்த்தனை கூட்டத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.