![](admin/uploads/.5da3156bce16b6.66979552.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர்: கடலூர்மாவட்டம் பண்ருட்டி அருகே புலவனுர் ஊராட்சிக்குட்பட்ட வேலாவெட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை (70) இவர் விவசாய கூலி தொழிலாளி. இவர் கட்டமுத்துபாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வேலை பார்த்துக்கொண்டு எலுமிச்சை பழங்களை வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்ற அம்மாவாசை உடம்பில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக பண்ருட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத்
தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டத்தில் அம்மாவாசை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடனடியாக கடலூரில் இருந்து மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலைக்குச் சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்மாவாசை உயிரிழந்த காரணத்தை கண்டறிய காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது