Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 54 பேருக்கு கொரோனா தொற்று

மே 21, 2021 01:55

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தலத்தாங்குடி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 பேர் தொற்று பாதிக்கப்பட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு ஒவ்வொருவராக தலத்தாங்குடி கிராமத்திலிருந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றபோது பரிசோதனையில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

இதனையடுத்து சுகாதாரத்துறை  விசாரணையில் கடந்த 8ஆம் தேதி அன்று அந்த கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் அன்னதானம் வினியோகம் நடைபெற்றதாகவும் இந்த அன்னதானத்தில் தொற்று பரவியதாக கூறப்படுகிறது 

இதனால் அந்த பகுதி முழுவதும் தங்களால் அடக்கப்பட்டு அங்கு யாரும் செல்லாதவாறு தடை செய்யப்பட்டுள்ளனர் மேலும் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர் 

இதேபோன்று நன்னிலம் அருகே உள்ள வீதிவிடங்கன் கிராமத்தில் மந்தவெளி தெருவிலும் கோவில் நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது இதிலும் 27 பேருக்கு தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தனர்

தலைப்புச்செய்திகள்