Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தொற்று நோயாளிக்கு ஆக்சிஜன் தர மறுத்ததால் மருத்துவமனை மேல்தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மே 22, 2021 07:11

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் ரத்தினமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52) இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு சமீப நாட்களுக்கு முன்பு சளி இரும்பல் காய்ச்சல் போன்ற கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்து வந்துள்ளது உடனே கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு மூச்சுத் திணறல் காரணமாக  ஆக்சிஜன் உடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு இருப்பதாக கூறி நீங்கள் வேறு மருத்து வமனைக்கு கொண்டு செல்லுமாறு உறவினர்களிடம் மருத்துவமனை சார்பில் கூறியுள்ளனர்.  இன்று இரவு மட்டும் சிகிச்சை அளிக்குமாறு உறவினர் கேட்டுக் கொண்டு

இன்று அதிகாலை உறவினர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றவுடன் இன்று காலை மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு ராஜேந்திரனின் உறவினர்களுக்கு வந்துள்ளது அப்போது ராஜேந்திரன் இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவித்தனர்.

ராஜேந்திரனின் உறவினார்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது ராஜேந்திரன் மருத்துவமனை மேல் தளத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்தது. ஆக்சிஜன் வழங்காததால்தான் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்