Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தமிழகத்திலேயே கூடுதலாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
* வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
* தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அவசியம் என மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
* தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் வரவில்லை. மக்களின் பாதுகாப்பிற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* இது விடுமுறை காலம் அல்ல. கொரோனா காலம். பொதுமக்கள் இதை உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.