Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

மே 25, 2021 07:05

திருவாரூர்: திருவாரூர் தருமக்கோவில் தெருவைச் சேர்ந்த மங்களசுந்தரி அவரது கணவர் பூமாலை இவ்விருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு ஹரிணி என்ற 8 வயது பெண் குழந்தை உள்ளது. 

கொரோனா பொது முடக்கத்தால் இந்த குடும்பம் வாழ்வாதாரம் இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் ரொக்கமாக ரூ10.000/- மற்றும் ஒரு மாதத்திற்கான அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள், முககவசம், சானிடைசர் போன்றவற்றை தலைவர் Rtn.R.ரஜினிசின்னா தலைமையில், செயலாளர் Rtn.G.ராஜ் (எ) கருணாநிதி, உதவி ஆளுநர் Rtn.R.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் அவர்களது இல்லத்தில் வழங்கப்பட்டது.   
  
இந்நிகழ்வில் பொருளாளர் Rtn.S.கண்ணன், உறுப்பினர்கள் வழக்கறிஞர் Rtn.S.லெனின், Rtn.S.ராஜா Rtn.பால.சம்பத், Rtn.S.செந்தில்குமார், Rtn.K.P.ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். 

தலைப்புச்செய்திகள்