Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடுப்பூசி போடும் பணியை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் துவங்கி வைத்தார். 

மே 27, 2021 09:01

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களப்பாள், குறிச்சிமூலை, குலமாணிக்கம், வெங்கத்தான்குடி, நல்லூர் அக்கரைகோட்டகம், குலமாணிக்கம், திருக்களர் உள்ளிட்ட ஊராட்சி பொதுமக்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக  தடுப்பூசி போடும் பணியை  நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் துவங்கி வைத்தார். 

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து, கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி மணிமேகலை முருகேசன்,  மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் வி.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மணிமாறன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாந்திபாலசுந்தரம் மற்றும் சாந்தி மகேந்திரன், மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குறிச்சிமூலை கேஎம்.அறிவுடைநம்பி உள்பட களப்பாள் சுஜாதா பாஸ்கர், அக்கரை முத்தமிழ்செல்வி வேல்முருகன், குலமாணிக்கம் புவனேஸ்வரி குப்புசாமி, வெங்கத்தான்குடி திலகவதி சுப்ரமணியன், நல்லூர் ஹேமலதா ஆரோக்கியசாமி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்