Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியது

மே 28, 2021 11:01

பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 37 ஆயிரத்து 643 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 24,214 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 23 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 476 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 405 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 31,459 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 94 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 2 ஆயிரத்து 203 ஆக உள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 5,949 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகல்கோட்டையில் 214 பேர், பல்லாரியில் 725 பேர், பெலகாவியில் 1,147 பேர், பெங்களூரு புறநகரில் 623 பேர், பீதரில் 60 பேர், சாம்ராஜ்நகரில் 380 பேர்,
சிக்பள்ளாப்பூரில் 238 பேர், சிக்கமகளூருவில் 715 பேர், சித்ரதுர்காவில் 710 பேர், தட்சிண கன்னடாவில் 555 பேர், தாவணகெரேயில் 806 பேர், தார்வாரில் 678 பேர்,
கதக்கில் 370 பேர், ஹாசனில் 1,505 பேர், ஹாவேரியில் 159 பேர், கலபுரகியில் 153 பேர், குடகில் 337 பேர், கோலாரில் 591 பேர், கொப்பலில் 495 பேர்,
மண்டியாவில் 755 பேர், மைசூருவில் 2,240 பேர், ராய்ச்சூரில் 445 பேர், ராமநகரில் 263 பேர், சிவமொக்காவில் 822 பேர், துமகூருவில் 1,219 பேர், உடுப்பியில் 905
பேர், உத்தரகன்னடாவில் 659 பேர், விஜயாப்புராவில் 306 பேர், யாதகிரியில் 190 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 273 பேரும், பாகல்கோட்டையில் 2 பேரும், பல்லாரியில் 22 பேரும், பெலகாவியில் 15 பேரும், பெங்களூரு புறநகரில் 13
பேரும், பீதரில் 2 பேரும், சாம்ராஜ்நகரில் 9 பேரும், சிக்பள்ளாப்பூரில் 11 பேரும், சிக்கமகளூருவில் ஒருவரும், சித்ரதுர்காவில் 5 பேரும், தட்சிண கன்னடாவில் 5
பேரும், தாவணகெரேயில் 2 பேரும், தார்வாரில் 15 பேரும், கதக்கில் 5 பேரும், ஹாசனில் 7 பேரும், ஹாவேரியில் 4 பேரும், கலபுரகியில் 5 பேரும், குடகில் 3
பேரும், கோலாரில் 3 பேரும், கொப்பலில் 3 பேரும், மண்டியாவில் 4 பேரும், மைசூருவில் 18 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் ஒருவரும்,
சிவமொக்காவில் 7 பேரும், துமகூருவில் 14 பேரும், உடுப்பியில் 2 பேரும், உத்தரகன்னடாவில் 13 பேரும், விஜயாப்புராவில் 4 பேரும், யாதகிரியில் 5 பேரும்
என மொத்தம் 530 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்