![](admin/uploads/.5eaffbd305d125.59524242.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நன்னிலம்: நன்னிலம் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு அரிமா சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை காவல் துணைக் கண்காணிப்பாளர் உணவு வழங்கினார்.
நன்னிலம் அரிமா சங்கம் சார்பில் தலைவர் பி.ஆறுமுகம் தலைமையில், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்குக் காரணமாக வேலையின்றி தவிக்கும் சாலையோரம் வசிக்கும் நூற்றுக்குமேற்பட்ட ஏழை மக்களுக்கு, காவல்துறை நன்னிலம் உட்கோட்டத் துணைக் கண்காணிப்பாளர் அ.இளங்கோவன் உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் செயலாளர் செல்.சரவணன், பொருளாளர் சுந்தர், முன்னாள் விமானப்படை அலுவலர் ஜெயராமன், முகமது வஜீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.