Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவாரூர்: நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் மாமனார் வீட்டுக்கு சென்ற தம்பதியினர் மீது லாரி மோதி கணவர் பலியானார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
திருவாரூர் அருகே உள்ள எண்கண் கீழகாலனி பகுதியைச் சேர்ந்தவர் அழகுசுந்தரம் வயது 28 இவரது மனைவி சரண்யா வயது 25 திருமணம் ஆகி ஆறு மாதங்கள் உள்ள நிலையில் இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு நன்னிலம் நோக்கி சென்றனர்
மணக்கால் வழியாக நன்னிலம் அருகேயுள்ள நீலக்குடி மத்திய பல்கலைக்கழகம் வழியாக வந்துள்ளனர் மத்திய பல்கலைக்கழகம் அருகே வந்தபோது எதிரே வந்த ஒரு லாரி அவர்கள் மீது வேகமாக மோதியது இதில் படுகாயம் அடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் நன்னிலம் போலிசாரும் மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலனஸ் மூலம் அனுப்பி வைத்தனர்
இந்த தகவல் நன்னிலம் தனிப்பிரிவு காவலர் சீனிவாசனுக்கு கிடைத்தது உடன் இந்த தகவலை நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்து சினிமா பாணியில் மோதிவிட்டு தப்பிச் சென்ற லாரியும் லாரி ஓட்டுநரை விரட்டிச் சென்று குடவாசல் அருகே மடக்கி பிடித்தனர்
மருத்துவமனையில் அனுமதித்த அழகு சுந்தரம் சிகிச்சை பலனின்றி இறந்தார் மேலும் சரண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரி ஓட்டுநர் இடையூறு அம்மலூர் தெற்கு தெருவை சேர்ந்த சுரேஷ் சை நன்னிலம் போலீசார் கைது செய்தனர்