![](admin/uploads/.60d8171ee14b09.59390562.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கொரோனா தொற்று அதிகம் பாதிக்கபட்டுள்ள மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 கார் ஆம்புலனஸ் வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின் பி.பி.ஈ எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிலும் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வு மேற்கொண்ட முதல்வர் நோயாளிகளிடம் நலன் விசாரித்தார்.
இந்த ஆய்வின்போது சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன் அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.