Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சாவூரில் கனரா வங்கி மாநகராட்சி முன் கள பணியாளர்களுக்கு உதவி  

மே 30, 2021 06:59

தஞ்சாவூர்: தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு சுகாதார தடுப்பு பணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதைப் போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சுகாதார துறை ஆகியவை கொரனோ தடுப்பு பணிகளை செய்து வருகிறது. 

இந்நிலையில் தஞ்சாவூரில் கனரா வங்கி மண்டல அலுவலகம் சார்பில் சுகாதார பணியில் ஈடுபடும் முன் கள பணியாளர்களுக்கு உதவும் வகையில் 5 லிட்டர் கொண்ட 22  சானிடைசர் கேன் மற்றும் ஆயிரம் முக கவசங்களை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் வங்கி அதிகாரிகள் ஜெயபிரதாப் ஜெயக்குமார், விமல் ஆகியோர் வழங்கினார்கள்.
 

தலைப்புச்செய்திகள்