Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து இறங்குமுகம்

மே 31, 2021 12:13

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 38 ஆயிரத்து 809 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 20,378 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 87 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 382 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 679 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 28,053 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 17 ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 10 ஆக உள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 4,734 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகல்கோட்டையில் 193 பேர், பல்லாரியில் 598 பேர், பெலகாவியில் 1,171 பேர், பெங்களூரு புறநகரில் 392 பேர், பீதரில் 37 பேர், சாம்ராஜ்நகரில் 402 பேர்,
சிக்பள்ளாப்பூரில் 356 பேர், சிக்கமகளூருவில் 671 பேர், சித்ரதுர்காவில் 805 பேர், தட்சிண கன்னடாவில் 727 பேர், தாவணகெரேயில் 698 பேர், தார்வாரில் 525 பேர்,
கதக்கில் 289 பேர், ஹாசனில் 2,227 பேர், ஹாவேரியில் 206 பேர், கலபுரகியில் 107 பேர், குடகில் 271 பேர், கோலாரில் 341 பேர், கொப்பலில் 365 பேர்,
மண்டியாவில் 643 பேர், மைசூருவில் 1,559 பேர், ராய்ச்சூரில் 278 பேர், ராமநகரில் 164 பேர், சிவமொக்காவில் 386 பேர், துமகூருவில் 773 பேர், உடுப்பியில் 651
பேர், உத்தரகன்னடாவில் 504 பேர், விஜயாப்புராவில் 198 பேர், யாதகிரியில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 213 பேரும், பாகல்கோட்டையில் 2 பேரும், பல்லாரியில் 13 பேரும், பெலகாவியில் 5 பேரும், பெங்களூரு புறநகரில் 10
பேரும், பீதரில் 2 பேரும், சாம்ராஜ்நகரில் 5 பேரும், சிக்பள்ளாப்பூரில் ஒருவரும், சிக்கமகளூருவில் ஒருவரும், சித்ரதுர்காவில் 2 பேரும், தட்சிண கன்னடாவில் 5
பேரும், தாவணகெரேயில் 8 பேரும், தார்வாரில் 19 பேரும், கதக்கில் 5 பேரும், ஹாசனில் 11 பேரும், ஹாவேரியில் 10 பேரும், கலபுரகியில் 4 பேரும், குடகில் 3
பேரும், கோலாரில் 3 பேரும், கொப்பலில் 5 பேரும், மண்டியாவில் 4 பேரும், மைசூருவில் 8 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் 3 பேரும், சிவமொக்காவில் 12 பேரும், துமகூருவில் 8 பேரும், உடுப்பியில் 2 பேரும், உத்தரகன்னடாவில் 7 பேரும், விஜயாப்புராவில் 4 பேரும், யாதகிரியில் 4 பேரும் என மொத்தம் 382 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக
கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. நேற்று முன்தினம் 20,628 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 20,378 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 492 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 382 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்