Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: மும்பை துறைமுக வழித்தடமான திலக்நகர்-செம்பூர் ரெயில் நிலையம் இடையே நேற்று முன்தினம் மதியம் 2.12 மணி அளவில் வாஷி நோக்கி மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் தலை வைத்து படுத்து இருப்பதை மோட்டார் மேன் கவனித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அவசர பிரேக் போட்டு 10 மீ்ட்டர் தொலைவில் ரெயிலை நிறுத்தினார். பின்னர் தண்டவாளத்தில் படுத்து கிடந்த வாலிபரை
அங்கிருந்து நகரும்படி தெரிவித்தார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த மோட்டார் மேன் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன்படி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதன்பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் தப்பிஓடிய நபர் யார்? எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் துரித கதியில் ரெயிலை நிறுத்தி விபத்து ஏற்படாமல் தடுத்த மோட்டார் மேன் ரத்னாகரை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.