Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தை திறக்கக்கோரி மனு

ஜுன் 01, 2021 11:24

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஊராட்சி  ஒன்றியம் அண்ணா கிராமத்தில் அமைந்துள்ள அரசு அறிஞர் அண்ணா திருமண மண்டபம் சுமார் 10ஆண்டுகளாக மூடியே கிடக்கின்றது. 

இப் பகுதியில் சுமார்  ஐம்பதாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அன்றாட வாழ்வியியலில்  சுப நிகழ்ச்சிகள், காது அணிவிழா, மஞ்சள் நீராட்டுவிழா, திருமணம் நிகழ்வு ஆகியவைகள் நடைபெற இத்திருமண மண்டபத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விடக்கோரி மதிமுக ஒன்றிய செயலாளர் நாகை ஜெய்சங்கர் தலைமையில் கோரிக்கை மனு பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனிடம் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்