![](admin/uploads/.5e666de2b93802.17441508.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தமிழகம்: வரும் 19.5.2019ல் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களை அதிமுக தலைமை இன்று அறிவித்தது.
அரவக்குறிச்சியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றத்தில் முனியாண்டி, சூலூரில் வி.பி.கந்தசாமி, ஒட்டப்பிடாரத்தில் பெ.மோகன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
சூலூர் தொகுதியின் வேட்பாளர் வி.பி.கந்தசாமிகோவை புறநகர் மாவட்ட புரட்சித்தலைவர் அம்மா பேரவைத்தலைவராக உள்ளார். அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.வி. செந்தில்நாதன், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.முனியாண்டி அவனியாபுரம் பகுதிக் கழக செயலாளராக உள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பெ.மோகன் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவர் தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழக துணைச்செயலாளராக உள்ளார்.